என் மன்னன்
தலைக்கு மேலே வானம் நீ.....
என் உள்ளங்கையில் ரேகை நீ....
சொல்லில் ரசித்த சொல்லும் நீ....
சொல்லில் இல்லா இன்பம் நீ....
சுட்டும் சுடாத சூரியன் நீ....
என் மேல் விழுந்த மழையும் நீ....
என்னைத் தாக்கிய புயலும் நீ....
என் குளிரும் தென்றல் காற்றும் நீ....
ஆழம் அறிந்த ஆயுதம் நீ....
என் அன்பில் கலந்த அதிசயம் நீ....
கையில் அடங்கா கடலும் நீ....
எனைக் கட்டிப்போட்ட காதலும் நீ....
ஓவியன் வரையா அரசன் நீ....
ரசிகை ரசித்த ஓவியம் நீ....
தானாய்க் கிடைத்த வரமும் நீ....
நான் கேட்டுக் கிடைத்த நிம்மதி நீ....
வெண்மை கொண்ட கறுமை நீ....
மெண்மை கொண்ட வன்மை நீ....
நான் தொடராய் எழுதும் கதையும் நீ....
அதில் ஒவ்வொரு முற்றுப்புள்ளியும் நீ....
மெட்டில் அடங்கா பாட்டும் நீ....
நான் கட்டி முடியா கவிதை நீ....
என் மாளிகை கண்ட மன்னன் நீ ....
என் தோளில் சாயும் தோழனும் நீ ....
என் பெயரில் கலந்த பெருமை நீ ....
என் உயிரில் கலந்த உயிரும் நீ .