உன் நினைவுகள் என்னில் மறைந்தால் மரணம் 555
என்னவளே...
உன்னை நான் முதன் முதலில்
பார்த்த போது வெட்கம் வந்ததடி...
எனக்குள்ளும் உன் மீது காதல்
வந்ததை உணர்ந்தேன்...
தென்றல் கலைத்து போட்ட
உன் முகம் மறைத்த கூந்தலை...
கண்சிமிட்டி ஒதுக்கினாய்
ஒற்றை விரலால்...
உன் தோழிகளோடு
சின்ன சின்ன உரசல்களும்...
சில்லென நீ சிரிக்கும்
சிரிப்பும்...
நீ சிரித்த பொழுது நான்
நினைவிழந்த நிமிடங்களும்...
உன்னில்
தொலைத்தேனடி என்னை...
சொல்ல நினைக்கும்
போதெல்லாம்...
ஏதோ ஒன்று என்னை
தடுத்து கொள்ள...
சொல்லாமலே நான்...
என்னில் உயிர் பெற்ற
உன் நினைவுகள்...
என்னில் மறையும் போது
நான் கண்மூடுவது உண்மையடி...
கண்மூடுமுன்
சொல்லிவிடுவேன்...
என் காதலை உன்னிடம்.....