ராசாவே உன்ன நம்பி - திகில் தொடர்- Episode 01

ராசாவே உன்ன நம்பி...- திகில் தொடர்-
Episode 01

" ராஜ் ராஜ் எழும்புங்க நேரம் ஆகிட்டு " என்று எழுப்பினாள் ராஜேஷின் மனைவி திவ்யா. " ராஜ் அம்மா அப்பா எல்லாம் எழுந்துட்டாங்க எழும்புங்க "

ராஜ் : " செல்லம் கொஞ்ச நேரம் தூங்குறான்டா ப்ளீஸ் " என்று சொல்லி விட்டு போர்வையால் முகத்தை மூடினான்.
" அம்மா திவ்யா ராஜ் எழும்பிட்டானாமா? " என்று கேட்டாள் ராஜேஷின் அம்மா.
ராஜ் சற்றென்று எழும்பி திவ்யாவின் வாயை கையால் மூடிவிட்டு " அம்மா எழும்பிட்டன் அம்மா " என்று சொல்லி விட்டு ஓடினான் குளியல் அறைக்கு. சிறிது நேரம் கழித்து
ராஜ் : " திவ்யா... திவ்யா.... "
திவ்யா : " என்னங்க? "
ராஜ் : " டவல கொஞ்சம் எடுத்து தாடா செல்லம்..!! "
திவ்யா : " போடா எடுத்து தரமாட்டான் என்னடா செய்வ? "
ராஜ் : " என்ன டாவா? "
திவ்யா : " ஆமாடா என்ன செய்வ என்னடா புருஷன எப்படி கூப்பிட்டா உனக்கு என்ன போடா "
ராஜ் : " செல்லம் சண்ட போட டைம் இல்லமா டவல கொஞ்சம் கொடுக்கிறியா? "
திவ்யா : " அது "
ராஜ் : " ஹ்ம்ம்ம்ம்ம்ம் இவ தலயோட தங்கச்சி தான "
திவ்யா : " என்ன "
ராஜ் : " ஒண்ணுமில்லமா ரொம்ப குளிருது சீக்கிரம் தாரியா "
சின்ன செல்ல சண்டைக்கு பிறகு ஆயதம் ஆனார்கள் புது வீட்டுக்கு செல்ல.
ராஜும் அவனுடைய அம்மா அப்பா மனைவி எல்லோரும் வாகனத்தில் ஏறினர். ராஜ் வாகனத்தை ஸ்டார்ட் பண்ணினான் வாகனம் புது வீட்டை நோக்கி சென்றது..

தொடரும் .................

எழுதியவர் : முஹம்மத் றபீஸ் (10-Nov-14, 4:19 am)
சேர்த்தது : றபீஸ் முஹமட்
பார்வை : 927

மேலே