உன் அருகில் நிற்கிறேன்

கோவிலில் தீபம் ஏற்றி வைத்தாய்
அதன் அருகில் நானும்
தீபம் ஏற்றி வைத்தேன் ,
என் தீபம்
அணைந்துவிட்டது,
காற்றில் அசந்த
உன் தீபம்
என் தீபத்தை
பற்றவைத்தது,
உன் தீபத்திற்கு தெரிகிறது
உனக்கு தெரியவில்லையா ?
நான் உன் அருகில் நிற்பது ...