-----------அவள்-------------

....................அவள்.........................


முகப்பருகள் அழகாகும் அவள்
முகத்தினில் முளைக்கையிலே..!

கண்மையும் வெக்கப்படும் அவள்
கண்களில் வரைகையிலே..!

சிரிப்புக்கு பொறாமை அவள்
செவ்விதழ்கள் சிரிக்கையிலே..!

காற்றுக்கு குளிர்ஜுரம் அவள்
மூச்சுக்காற்று படுகையிலே..!

வளையல்களுக்குள் பட்டிமன்றம் அவள்
வலதுகையில் சிணுங்கையிலே..!

பூக்களுக்கு சாகாவரம் அவள்
கூந்தலுக்குள் நிலைக்கையிலே..!

கண்ணீர்த்துளிகளுக்கு கடுங்காவல் அவள்
கண்களை தீண்டுகையிலே..!

புற்களுக்குள் புதுபுரட்சி அவள்
பாதமிரண்டும் தொடுகையிலே..!

சூரியனுக்குள் மின்தடை அவள்
கண்ணிரண்டும் தூங்கையிலே..!

மழைத்துளிகளுக்குள் மல்லுத்தம் அவள்
யாக்கையை அங்கு நனைக்கையிலே..!

என்
மனதினுள் மட்டும் ஏதோ ஆரவாரம் அவள்
இல்லா நிலைமையை உணர்கையிலே........!

எழுதியவர் : ச.ஷர்மா (13-Nov-14, 7:03 pm)
பார்வை : 1032

மேலே