ஓர் இரவு

பிரபல எழுத்தாளர்கள் வரிசையில் தன் பெயரும் இடம் பெற வேண்டும் என்ற கனவுகளோடு வாழ்பவன் தான் விஜயன்...அரசாங்க வேலையில் நல்ல சம்பளம் என்றிருந்தாலும் திருமணம் என்னும் பந்தத்தில் அவனுக்கு உடன்பாடு கிடையாது ..வயது முப்பதை தொட்டாலும் எந்த பெண் மீதும் ஏக்கம் கொள்ளாதவன்.. கதை எழுதுவதற்காக பல ஊர்களை சுற்றுவது வழக்கம் ..அப்படி ஒரு தடவை கதை எழுதுவதற்காக ஊட்டி சென்றான் ..

ஊட்டியின் காலை பொழுதில் கதை எழுதுவதற்காக botanical garden என்னும் இடத்தை தேர்வு செய்தான் .அந்த ரம்மியமான காலை பொழுது மழை தூரி கொண்டு சிலேன காற்று எங்கும் மக்கள் கூட்டம் ...இவன் தனியே மரத்தடியில் கதையை சிந்தித்து கொண்டிருக்கையில் இருபது வயதுடைய பெண் மழையில் நனைத்தபடியே வந்தால் .அவள் அணிதிருக்கும் நவ நாகரீக உடை மழையில் நனைந்து தன் அங்கங்களை வானுக்கு இயற்கைக்கு சமர்ப்பணம் செய்து கொண்டிருந்தது ..அதை கவனித்த விஜயன் தன் பார்வையை எதிர்புறம் செலுத்தினான் இருந்தாலும் மனம் எதோ சஞ்சலம் அடைய என்ன என்று அறியாமலே திரும்பவும் அந்த பெண்ணை ரசித்தான் ... அந்த பெண் அவனை கடந்ததும் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தான் ..ச்ச என்ன இப்படி பெண்ணுக்கு அடிமை ஆயிடோமே!! நாம எதோ தப்பு செய்கிறோமோ !!ஒரு பெண்ணை இப்படி பார்ப்பது தவறில்லையா என்று மனதிற்குள் உதித்த ஆயிரம் கேள்விகளோடு அந்த இடத்தை விட்டு நகர்ந்து அவன் தங்கி இருந்த விடுதிக்கு சென்றான் ...

மதிய உணவு முடித்து தன் அறைக்கு ஓய்வெடுக்க சென்றான் .. கதை எழுதலாம் என்று எண்ணிய போது அந்த இளம் பெண்ணின் நினைவுகள் துரத்தின ..என்ன இது அந்த பெண்ணின் நியபகமாவே இருக்கே இப்படியே மனம் அலைபாயுதே உடல் இச்சை தணியாததால் இப்படி எல்லாம் தோன்றுகிறதோ என்று அவனுக்குள் தன்னை சுயபரிசோதனை செய்து கொண்டிருந்தான் ... அப்பொழுது அவன் கதவை யாரோ தட்டும் சதம் கேட்டு கதவை நோக்கி சென்றான் ..

ரூம் பாய்:சார் எப்படி இருக்கீங்க நீங்க சிங்கள் பெட் தான ??
விஜயன் :நல்ல இருக்க ... நான் சிங்கள் தான் ஏன் கேட்குற ??
ரூம் பாய் :இல்ல சார் ..ஒரு லேடி ரூம் கேட்டு வந்திருந்தாங்க .. இது சீசன் டைம் நாலா எங்கயும் ரூம் கிடைக்கலன்னு சொன்னாங்க ..இங்கயும் ரூம் எல்லாம் புல்லா ஆயிருச்சு ...அத உங்க ரூம் ஷேர் பண்ணிக்கலாமான்னு கேட்க வந்த ...
விஜயன்:உனக்கு அறிவு எதாவது இருக்கா ???எப்படியா ஆணும் பொன்னும் ஒரே ரூம்ல தங்கறது .??
இந்த விஷயம் அந்த பொண்ணுக்கு தெரியுமா ???
ரூம் பாய் :அந்த பொண்ணுக்கு தெரியும் சார் .. நான் சொல்லிட்டேன் .. உங்கள பத்தி எனக்கு தெரியாதா எவ்ளோ வருசமா உங்ககூட பழகி இருக்க ... பொண்ணுங்க நாலே நீங்க தள்ளி போயிருவீங்க அத நாலா தான் அந்த பொண்ண உங்க ரூம்ல தங்க வெக்கலாம்னு நினைச்ச ... ஒரு nite தான் சார் ..அந்த பொண்ணு பாவம் சார் ..
விஜயன் :சரி வர சொல்லுங்க ...

தொடரும் .....................................

எழுதியவர் : அருண்வாலி (14-Nov-14, 4:33 pm)
Tanglish : or iravu
பார்வை : 320

மேலே