ஒற்றுமைகொள் -ரகு

பூகோளக்
கோள்களுக்கும்
துணைக்கோள்களுண்டு

நட்சத்திரக்
கூட்டங்களுக்கிடையில்தான்
நிலவூர்வலம்

திரள் மேகங்களுள்
பெரும் மழை

என்னே அழகுகாண்
நிறக்கலவை வானவில்

தனித்தப்பூ விலக்கி
அடர்ந்தப் பூவுக்குள்
அழகின் மொத்தம்

ஒற்றை மரம்
தோப்பெனலாகா

கணக்கற்ற
காயங்களுக்குப் பிறகே
கற்சிலை

தோல்விக்கல்ல
தோல்விகளுக்கே
வெற்றி

ஏனைய
எழுத்துக்கள் சேர்ந்தபின்
ஓர்கவிதை

தனித்திராதே மனிதா
ஒற்றுமைகொள்
உலகுவெல்!

எழுதியவர் : அ.ரகு (16-Nov-14, 11:26 am)
சேர்த்தது : சுஜய் ரகு
பார்வை : 103

மேலே