தோற்றினும் முயற்சி செய்

தோற்று தான் போவோம் என்று தெரிந்த பின்னும்..,
முயல்வதை விடுவதில்லை
கரை தாண்டிச் செல்லத் துடிக்கும் அலைகள்..!!

அதனால் தான் என்றோ ஓர் நாள் வெற்றி காண்கிறது..,
ஆழிப்பேரலையாய்..!!

ஆனால் உன் முயற்சி
அழிப்பதாய் இராமல்..,ஆக்கமாய் அமையட்டும்..!!




கல்லூரி: திரஜ்லால் காந்தி தொழில்நுட்பக்கல்லூரி., ஓமலூர், சேலம்.
பிரிவு: இ.சி.இ. இரண்டாம் வருடம்(சி)

எழுதியவர் : சரண்யா.ரா (16-Nov-14, 7:48 pm)
பார்வை : 191

மேலே