நீ வேறு நான் வேறு இல்லை
நீ வேறு நான் வேறு இல்லை
உயிராளனே ....
நீ வேறு நான் வேறு இல்லை ...
நாம் இணைந்த உயிர் ..
என்றெல்லாம் வார்த்தை ...
கூறியவனே....!!!
உன் பிரிவு ...
கொஞ்சம் கொஞ்சமாய் ...
கொல்லுதடா...
நீ சொன்ன வார்த்தைகளை ...
மறந்து விட்டீரோ ....?
குறள் 1209
+
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.
+
நினைந்தவர்புலம்பல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 129