நினைவுகள் தூங்க வில்லை
என்னவனே ....
என் கண்கள் தான் தூங்கி ...
நாடகமாடுகின்றன ....
நினைவுகள் தூங்க வில்லை ...!!!
என் கரு விழிகள் ...
தூங்குமானால் கனவில் ..
வந்து பார் நான் உயிரோடு ....
இருப்பதை சொல்வேன் ....!!!
குறள் 1212
+
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.
+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 132