என் வாழ்க்கை

காங்கேயம் காளை முட்டிய போதும்
பொறுத்து போக சொன்னவள் என் அம்மா...!


ஆண்சிங்கம் துரத்திய போதும்
விலகி போக சொன்னவர் என் அப்பா...!

குரங்கின் கையில் பூமாலை கொடுத்து
மாலையிட சொனவள் என் அக்கா..!

மிருகங்கள் மத்தியில்
மீள துயரத்தில் நான்...!

சொந்தங்கள் என்னை கூறு போட்ட
போதும் கூட அஞ்சவில்லை..!

என் மகளுக்கும் கூட இந்த நிலை வருமோ
என்று தான் அஞ்சுகிறேன்...!

அதனால் தான் கருவறையில்
உன்னை சுமக்கும் பாக்கியத்தை
கடவுளிடம் மறுக்கிறேன்

எழுதியவர் : (19-Nov-14, 11:05 pm)
Tanglish : en vaazhkkai
பார்வை : 87

மேலே