சாமி கிட்ட போன அப்பா

(நமக்கு பிடிச்ச யாரையாவது இழந்துட்டோம் அப்டினா, எல்லாமே போயிருச்சின்னு உக்காந்து அழ வேண்டாம்.. !!
நம்ம நாளா மறக்க முடியாத அப்போ, அவங்க நாளும் மறக்க முடியாது நம்ம கூடயே தான் இருப்பாங்க.!!
கண்ணுக்கு தெரிய மாட்டாங்க, கண் மூடி நெனைச்சி பாத்த உணர வைப்பாங்க.. !!

அழறதுக்கு பதிலா, நம்ம கூடயே தான் இருக்காங்கன்னு நம்புற நம்பிக்கை அவங்கள ரொம்ப சந்தோசமா வைக்கும்..!!
இந்த கவிதையை என்னோட தோழியோட அப்பாவோட நினைவு நாளுக்கு, அவங்க அப்பாக்கு சமர்பிக்கிறேன்.. !!! )

சாமிக்கிட்ட எல்லாமிருக்கும்னு,
எங்க ஆத்தா சொல்லுச்சி.. !
எல்லாமே இருந்த பின்னும்,
எங்கப்பாவ சாமி ஏன் எடுத்துச்சி !?
"நாள் ஆனா வலி போச்சின்னு",
ஊரேல்லாம் பேச்சி..!!
ஆறு வருஷம் ஆகி போச்சி. ,
கண்ணு தான், கண்ணீர் ஊத்து ஆச்சி..! :'(

அப்பானு நெனைச்சாக்க, கண்ணு
முன்னே நிக்கிற.,!
ஆனாலும், ஏன்பா வழியும் கண்ணீரை
தொடைக்க மறுக்கிற.. !?
ஏன்டா பொறந்தோம்னு, அப்பப்ப
தோணுது.. !!
அப்பா, உன் நினைவு தான்
அதை எல்லாம் மாத்துது. !

அப்பானு, நான் அழுதா ,அம்மாவும் அழுவும்னு
அழுத்தமா தான் நிக்கிறேன்.. !!
ஆனாலும், தனிமைல கண்ணீரில் மிதக்கிறேன்.. !
உன்னோட நான் இருக்கேன்னு, கனவுல சொல்லுற..
கண் முழிச்சி பாத்தாக்க காணாம போகுற.. !

எல்லாரும் சுத்தி இருந்தும்,
உள்ளுக்குள்ள எதோ கொறையுது.. !!
உன்னோட ஞாபகம் தான்.. !!
எப்போதும் நெஞ்சிக்குள்ள அலையுது.. !!

பெருசாக்க ஆசை எல்லாம், எனக்கு ஏதும் இல்லப்பா..!!
"அப்பானா அப்பா தான்னு' கொஞ்சுன
நாள் மட்டும் திரும்ப வேணும்பா..!
புதுசாக்க என் கொழந்தையா, நீயும் பொறந்து வருவியா??
அந்த ஒரு வரத்தை மட்டும், நீயும் எனக்கு தருவியா ..!??? :'(

எப்போதும் உன் நினைவாலே உயிர் வாழும்,
அன்பு மகள் - பிரியா

எழுதியவர் : நிஷாந்தினி.கே (20-Nov-14, 11:01 am)
பார்வை : 93

மேலே