கனவில் காணாத ஜீவன்கள்
என்னவனே -நீ
வரவில்லை வரவில்லை ..
புலம்பிகொண்டிருந்தேன்....
இப்போ இன்பமடா ....
கனவில் வருகிறாயே ....!!!
கனவில் காணாத ....
ஜீவன்கள் தான் - அவர்
நினைவால் புலம்புவர் ....
நொந்து மடிவர் ....!!!
நேரில் வருவது கனவும் ...
ஒன்றுதானே மனமே ....!!!
குறள் 1219
+
நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.
+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 139