நண்பன்டா

என்ன உன்னப் பார்த்து எவ்ளோ வருஷம் ஆச்சு ...எப்டி டா ...சாரி எப்டிங்க இருக்கீங்க..?

என்னடா...நீ டா போட்டே பேசலாம்

ஐயோ! மரியாதை மனசில இருக்கட்டும்னுதான் நினைப்பேன் ஆனா இந்த friendship கொஞ்ச நாள் கூட நீடிக்க மாட்டேங்குது

யாருடா இவரு?...புதுசா இருக்கறாரு

என்னோட ஸ்கூல படிச்சவன் மா

இந்த பையனயாவது நல்லா கெட்டியா பிடிச்சுக்கோ ....இந்த பைய்யன் நல்லவனா தெரியிறான்

ஏண்டா அம்மா அப்டி சொல்றாங்க

அது ஒன்னுமில்லடா

மற்றவங்ககிட்ட கடனா பணம் வாங்கிட்டான் அத திருப்பிக் கொடுக்கல....

அப்டியா... சரிபா எங்க அம்மா சீக்கிரம் வரச் சொன்னாங்க நா வரேன் டா

பாத்தியா பாத்தியா நீயும் நழுவப் பார்கிற ..?

போடா முதல்ல நீ இருக்குற கடனை அடைக்கப் பாரு நா அப்புறம் வரேன்

நீதான் நல்ல நண்பன்டா ....

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (23-Nov-14, 10:18 am)
பார்வை : 281

மேலே