மழை
காத்திருக்கும் வேளையிலே
கண்கலங்க வைப்பவளே
வாடையிலே நீ வந்து
அடைமழையாய் பெய்யலாமோ!
நீர்நிலை நிரப்பையிலே
ஆறுகளில் ஓடாமே
வெள்ளமென கரைபுரண்டு
ஊரையே நிரப்பலாமோ!
மண்ணுக்கு புனிதம்
நிறைவான மழையால் தானே
உன்னை நம்பி வாழும்—ஊர்சனத்தை
இரக்கமின்றி துன்புறுத்தலாமோ!
பண்டிகை திருநாள்—மழையால்
துளிரும் பச்சை நிறத்தால் தானே
தண்ணீரென்ற பெயருனக்கு
தண்மையாய் இருப்பதாலன்றோ!