உயிர்வாங்கும் பொழுது
மாலை பொழுதே ....
நான் காதலருடன் இருந்த ...
இன்ப பொழுதில் -நீ
மாலை பொழுதாய் ...
இருந்தாய் .....!!!
என்னவனை ....
பிரிந்திருக்கும் பொழுது ...
இது மாலை பொழுதல்ல ...
என்னை கொல்லும்....
உயிர்வாங்கும் பொழுது ...!!!
குறள் 1221
+
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.
+
பொழுதுகண்டிரங்கல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 141