காதல்

குயில் ராகம் கேட்கும் நேரம்
விழியின் ஓரம் உன் உருவம் தோன்றும்..!
உன்னை பார்க்கும் நேரம்
வாழ்வின் தாகம் தீர்ந்து போகும்..!

நித்தம் உன்னை நினைத்து
பித்தம் ஒன்று உள்ளே வளரும்...!
ரத்தம் மொத்தமும் கொதித்து
சப்தமிட்டு உன் பேர் சொல்லும்...!

சிற்பக்களையே சிணுங்கும் சிலையே
என்னை கரைப்பது உந்தன் விழியே...
செக்கச்சிவந்த சின்னக்கிளியே
உன் அழகு அந்த வேட்க்கதிரையே...!

எழுதியவர் : (2-Dec-14, 11:20 am)
சேர்த்தது : அர்ஷத்
Tanglish : kaadhal
பார்வை : 105

மேலே