எது உண்மை

நிலவு
குளுமையை தருகிறதா?
இல்லை..
பூமி அனுமதித்ததால்
வந்த குளிர்ச்சி பொழுதில்
நிலவு வருகிறதா..?

கடலைத் தேடி நதி ஓடியதா..?
இல்லை..
நிலம் அனுமதித்ததால்
ஏற்பட்ட வளைவு நெளிவுகள்
அங்கே கொண்டு சென்றதா?

நெருப்பினால் புகை வந்ததா..?
இல்லை ..
காற்று அனுமதித்ததால்
அது எழுவது
வெளியில் தெரிந்ததா..?

தர்மம் இறுதியில்தான் வெல்கிறதா..?
இல்லை ..
சூழ்நிலைகள் அனுமதிப்பதால்
சூது முதலில்
அதைக் கவ்வுகிறதா ?

பிரிவுகள் துக்கம் தருகின்றதா ..?
இல்லை
மனம் அனுமதிப்பதால்
அது உன்னுள்
என்றும் வளர்கின்றதா?

எழுதியவர் : கருணா (2-Dec-14, 3:55 pm)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : ethu unmai
பார்வை : 228

மேலே