பாரத அன்னையின் பரவசம்

விழியினூடே வரைந்து வைத்தேன்
வண்ண ஓவியமாய் என் தேசத்தை..
கிழியும் காகிதமாய் சிதைத்திடுமோ
சீர்கெட்ட ஊழல் அதை?..
அழிந்து விழும் மானுட விழிகளல்ல அவை...
அழித்து எழும் அவதார விழிகள்..
ஊழல் இருண்டு
உன்னதம் ஒளிரும் நம்பிக்கையில்
ஒளி வழி நாடும்
உத்தம விழிகள் -"இளைஞர்கள்.."

எழுதியவர் : அஞ்சா அரிமா (5-Dec-14, 7:12 pm)
பார்வை : 178

மேலே