உணர்ந்தால் உலகம் கையில்

வருவதும் போவதும் பணம்
வந்தால் போகாது காதல்
போனால் வராது உயிர்
வரவே வராது தாய்மையின் அன்பு !

தீர்கவே முடியாத கணக்கு கருவறை
கணக்கு தீர்த்திடவே வாழ்க்கை
கணக்குக்கு கணக்காய் மனம்
தீரவே தீராது மனித ஆசைகள்
கணக்கு தீர்ந்திட்டால் நிகழும் மரணம்!

எழுந்தவன் வீழ்வதும்
வீழ்ந்தவன் எழுவதும் -இயற்கை
விழுந்தால் மறையாத வடு பழி
எழுந்தால் மறைந்திடும் அவனது பிழை !

எழுதியவர் : கனகரத்தினம் (11-Dec-14, 8:38 am)
பார்வை : 79

மேலே