சில நேரங்களில் நான்
பத்திரமாய் வைத்திருக்கும்
பசுமையான எண்ணங்கள்..
துளிர்க்க வைக்கும்
துள்ள வைக்கும்
கவலைகளை மறக்கடிக்கும் !
பதிவுகள் மட்டுமே
பாத்தியப்படும் வாழ்வில்
சரிவுகள் எப்படி
சாத்தியப்படும் ?...
போர்வைக்குள் கிடைப்பது
உடலின் உஷ்ணம்தான்
வாழ்க்கை என்பதும்
வாழும் முறையில்தான்
வெளியிலிருந்து தேடும்
உள்நிறைவென்பது
நீரில் தெரியும்
நிலவைப் பிடிப்பது போல் ...
எண்ணம் போல் வாழ்க்கை..
எண்ணாமல் யாரோ சொன்னது !
ஏன் அப்படி இருக்க வேண்டும்?..
சுவாரஸ்யம்
எண்ணாத வாழ்க்கையில்தான் !
பள்ளமோ ,மேடோ
பார்ப்பது எங்கிருந்து
என்பதில்தான் பதிலுண்டு !
............................
....……………