ஒரு காதலின் குழப்பம்
ஒரு இடி முழக்கம் பிறகு ஒரு மின்னல்
மாறி வந்த இரண்டும் மாரி பொழிய
ஈந்த தேரில் வளர்ந்த முல்லை போல காதல் வளர்ந்தது
சொல்லத்தான் தைரியம் இல்லை எனக்கு
உன் கோபமும் உன் பேச்சும் என்னை அச்சப்படுதியதால்
சொல்லி தான் தெரிந்தது உன் காதல் வேறு என்று
வேறு ஒன்று முறிவு ஆகி போனதால்
காற்றில் ஆடுதே உன் மன கதவு
எனக்கும் புரியவில்லை
உன்னை சேர்வேனா? இல்லை வேறு ஒன்றை மணப்பேனா ?