யூகம் - சந்தோஷ்

" ஹாய் சிம்பு ! என்ன இந்த நேரத்துல? மார்னிங் ஐஞ்சு மணிக்கே..."

" நிலா, இவன் டார்ச்சர் தாங்க முடியல.. நிலா... என்ன என்னவோ பண்றான். நைட் முழுக்க தூங்க விடல தெரியுமா ? இத யார்கிட்ட சொல்லமுடியும் .. ? அதுவும் இந்த அசிங்கத்த. "

"ம்ம்ம்ம் என்ன பண்ணினான் ? "

" என்ன என்னவோ பண்றான். பண்ணகூடியதை தவிர "

"புரியல சிம்பு "

"புரியாத புதிர் ரகுவரன் போல.. அதுக்கும் மேல.. நிலா நீதான் எனக்கு ........"

"புரியுது.. இன்னிக்கு மத்தியானம் லீமெரிடியனுக்கு வா. ரெண்டு மணிக்கு.. சரியா ? "


-----]

மதியம் 2 மணி : லீமெரிடியன் கார் பார்க்கிங்

அலைப்பேசி சிணுங்கியது " நிலா நான் வந்துட்டேன் டா.. நீ எங்க இருக்க ? "

எதிர்முனையில் " உன் புருஷனை உனக்கு ரொம்ப பிடிக்காதா ? இல்ல கொஞ்சமாவது பிடிக்காதா ? "

"ஏன் டா இப்படி கேட்கிற ? வசதியா வச்சி இருக்கிறான். ஆனா.. நான் நைட்வரும் போதெல்லாம்... அவன் பண்ணும் டார்ச்சர் முடியல நிலா... ... டெய்லியும்...."

" சரி சரி... பப்ளிக் பிளேஸ் ல அழாதே...! "

"ஒகே நிலா நீ எதுக்கு அவனை பிடிக்குமான்னு கேட்ட ? "

" உனக்கு தெரியும்... வெயிட் "

"நிலா ஒன்னு சொல்லட்டுமா... இப்போ எதுக்குன்னு கோவிச்சிக்க கூடாது ?"

" ம்ம்ம்ம்ம் "

" லவ் யூ டா நிலா.. ஐ மிஸ் யூ.. அம்மாவோட பண ஆசையினால தான் நான் .. இப்படி... அவன் கிட்ட மாட்டிகிட்டேன்.."

" ஹே சிட்...! மேரேஜ் ஆனாதான் லவ்ன்னு நிரூபிக்கனுமா...? அங்கயே இரு.. வீட்டுக்கு போயிடாதே.. நாலு மணி ஆனலும் வெயிட் பண்ணு சிம்பு...."

---------

மதியம் நேரம் 3: 30 -- லீமெரிடியன் காபி பார்...!

அலைப்பேசியில் நிலாவை தொடர்பு கொள்ள முயலுகிறாள் சிம்பு.
"நீங்கள் தொடர்புக்கொண்ட வாடிக்கையாளரின் எண் ஆனது தற்போது அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது. சிறிது நேரம் கழித்து டயல் செய்யவும்" கணினி குரல்.. அலைப்பேசியில்...!


அப்போது காபி பார் .... தொலைக்காட்சி பெட்டியில் சற்று முன் வந்த செய்தியாக... == " பிரபல தொழிலதிபர் கொலை.. கொடூரமாக கொலை செய்த மேஜர் நேயநிலவன் போலீசில் சரண்டர்..! " ==


"ஐய்ய்யோ நிலா... ஏன் இப்படி பண்ணின.. யாரை நீ கொன்ன... என்னை தானே பார்க்க வரேன்னு சொன்ன... " என மனதிற்குள் திடுக்கிட்டவளாக மீண்டும் அலைப்பேசியில் நேயநிலவன் என்கிற நிலாவை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறாள்.. அதற்கு முதல் நொடியில் ஒர் அழைப்பு வருகிறது...

" மிஸஸ்... சிலம்பி பால்ராஜ் ....." எதிர் முனையில்


" யெஸ் யெஸ்.. யாரு நீங்க ? "

" டி2 போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து இன்ஸ்பெக்டர் பேசுறேன் மேடம். சாரி .. ஒரு பேட் நியூஸ். உங்க ஹஸ்பண்ட் கொலை செய்யப்பட்டு விட்டார்...அது பத்தி உங்கள விசாரிக்கனும்.....ஸ்டேஷன் வர்றீங்களா "

" அய்யோ... என் ஹஸ்பண்டை யாரு சார் கொன்னது.......???? "

----------------------------
மறுநாள்

" தன மலர் " நாளிதழில் செய்தி

==நடிகை சிலம்பியின் கணவரும் .. பிரபல தொழில் அதிபரும் பட தயாரிப்பாளருமான பால்ராஜ் படுகொலை... பணத்திற்கு ஆசைப்பட்டு நடந்த கொலையா ? போலீஸ் விசாரணை.==

"தின பந்தி" நாளிதழில் :

==மேஜர் நேயநிலவனுக்கும்.... நடிகை சிலம்பிக்கும் கள்ள தொடர்பா...? ருசிகர பிண்ணனி தகவல்கள் ==


சில நாட்கள் கழித்து.....!

"பக்கீரன் " வார இதழில்....
== மேஜர் நேயநிலவன் மறைந்துப்போன தன் மனைவியின் முன்னாள் காதலனை கொடூரமாக கொலை செய்திருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ==


"சீனியர் சப்போர்ட்டர் " வார இதழில்

== நடிகை மீது கொண்ட ஆசையினால் தானே தன் இள மனைவியை கொன்று பழியை பால்ராஜ் மீது சுமத்தி தப்பிக்க பார்த்தாரா மேஜர் நேயநிலவன். ??? நடிகையின் கைக்கூலியா மேஜர் ?? திடுக்கிடும் தகவல்களுடன் எமது சிறப்பு நிருபர் ===


------------------------------------------------
(முற்றும் )


-இரா. சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா .சந்தோஷ் குமார் (23-Dec-14, 10:34 am)
பார்வை : 268

மேலே