பிஞ்சு கை
கல்கள் பல தூக்கி
கைகள் காய்ந்து கிடக்குது...
ஒரு கையில் பொம்மையுடன்
மற்றொரு கையில் புத்தகத்தோடு
வீட்டில் மகிழ்ச்சியாய் இருக்கும்
குழந்தையை ஏக்கத்தோடு கண்கள் பார்க்குது..
பிச்சை எடுக்க மனசு தயங்குது..
பசி வயிற்றை வாட்டி எடுக்குது..
கொஞ்சம் வயிறு நிறையிது
கனவுகள் கனவாகவே கரையிது...!
-ஹரிகரன்