காதல் தினம்

காதலர்களுக்கு, காதல்பிறந்த நாள்.
நன்னாளாய், கொண்டாடுவோம் நாம் !
காதலில் ஏனில்லை மகிமை ?

இரு உள்ள உணர்வுகள்
´ரே திசையில் பயணிக்கும் ,
புதுமையான அனுபவங்கள்
புரிதலை விளக்கிவிடும்.
புரிதலுக்கு – காதலே நல்லது !...

உயர்திணையில் எப்பால் ஆயினும் ,
உயிர் உருகின் ´ருவர்
கண்ணீரே, அன்பை ¦º¡ல்லிவிடும்.
அன்பிற்கு – காதலே உயர்ந்தது !...

உள்ளங்களை வாய்க்கலப்பு பிரிக்கும்,
பிரிவு ஆசையை சுரக்கும்.
ஆசைக்கு – காதலே ஆச்சர்யம்!...



ஆயுதம் ஏந்தியவன் கைகளிலும்,
அழகுப் பூ கையமர்ந்து
அமைதியாய் ஆராதனை செய்கிறது.
அமைதிக்கு – காதலே சிறந்தது!...

நிற, உருவ பேதமின்றி,
உறவுகள் ´ற்றுமையாக வில்லையா ?
´ற்றுமைக்கு – காதலே உகந்தது!...

ஆதலால்,
காதல் செய்வீர்!...
காதல் செய்வீர்!!...
காதல் செய்வீர்!!!...

இளம் காதல் துளிர்விடட்டும்,
முதிர் காதல் விதைகளாகட்டும்.
உரக்கச் ¦º¡ல்லுங்கள், இனி – புது
உலகைப் படைப்பது காதலென்று!..
அவ்வுலகில்,
காதல் - அமிர்தம்!
காதலர்கள் – தேவர்கள்!...

எழுதியவர் : கண்ணன் (23-Dec-14, 3:11 pm)
பார்வை : 152

மேலே