எப்படி தாங்குயாய் என் பிரிவை

என்னவளே ...
உன்னோடு இருந்த நொடி ...
என் கைகள் உன்னிலிருந்து ...
விலகும் சந்தர்ப்பத்தில் ...
மெல்லிய குளிர் காற்று ...
எம்மை பிரித்தது உயிரே ...!!!

அந்த சிறு பிரிவையே ...
தாங்காத என்னவள் -என்னையே ...
பிரிந்திருக்கும் என்னவளே
எப்படி தாங்குயாய் என் பிரிவை ..?

குறள் 1239
+
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.
+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 159

எழுதியவர் : கே இனியவன் (31-Dec-14, 10:09 am)
பார்வை : 68

மேலே