போனால் போகட்டும் போடா
தொங்கப் போடணுமா தலைய ? நீ
தொட வேண்டுமடா உயர் நிலைய..!
வைக்காதே இனியும் மனம் கலைய
வாழ்ந்து விடு பிறர் மனமும் நிறைய....!!
நடந்து முடிஞ்சது கனவடா நண்பா
நாள் இன்று நமக்கு வரமடா தோழா
நனைய வைக்காதே விழிகளை நீரால்
நடைபோடு சிங்கமென நீயுமே ஜோராய்...!!