போனால் போகட்டும் போடா

தொங்கப் போடணுமா தலைய ? நீ
தொட வேண்டுமடா உயர் நிலைய..!
வைக்காதே இனியும் மனம் கலைய
வாழ்ந்து விடு பிறர் மனமும் நிறைய....!!

நடந்து முடிஞ்சது கனவடா நண்பா
நாள் இன்று நமக்கு வரமடா தோழா
நனைய வைக்காதே விழிகளை நீரால்
நடைபோடு சிங்கமென நீயுமே ஜோராய்...!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயாணன் வா (3-Jan-15, 10:40 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 160

மேலே