சாதி ஒழி, மதம் அழி, சாதி பொங்கல் கவிதை போட்டி 2015

சாதி ஒழிய வேண்டும்
மதம் அழிய வேண்டும்
சாதனை புரிய வேண்டும்
அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்.

சாதிகள் இல்லை என்று
சபதம் ஏற்க்க வேண்டும்
சாதி மத வெறியர்களை
சபித்தே ஆக வேண்டும்..

காரியம் சாதிபதற்க்கு
சாதியை பயன்படுத்தும்
சதியர்களை ஒழிக்க வேண்டும்
சத்தியமாய் நாம் ஒன்று கூடி..

சாதியை ஒழித்து
மதத்தை அழித்து
சாதியே இல்லை என்று
சரி சமம் நாம் என்று.

அச்சமே இல்லாமல்
சாதி மத கயவர்களை
அழித்தே தீர வேண்டும்
அறுத்தே ஏறிய வேண்டும்..

முதலில் நாம் இணயவேண்டும்
முடிவாய் நாம் வெற்றி அடைய
எழுத்துவில் எண்ணமாய் நாம்
பிறக்க வேண்டும்.. வருக.வருக..

எ.மன்சூர் அலி
சவுதி அரேபியா,ரியாத்

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (5-Jan-15, 11:16 am)
பார்வை : 101

மேலே