என் வாழ்க்கை
நான் என்ற வார்த்தையை
நாவினால் கூட கூற கூடாது - நாம் !
நாம் என்ற வார்த்தையினை
நாட்கள் சென்றாலும்
நாட்குறிப்போடு தொடர வேண்டும் - நாம் !
நம்மோடு நாமிருக்க,
நம்பியவரை இழக்க வேண்டுமா ? - நாம் !
நம்பியவர் இழக்க கூடாது
நம்பிக்கையை என்பதற்காக,
காதலை இழக்கலாமோ ? - நாம் !
இழக்க முடியாது காதலை, ஆனால்
இழக்க போகிறோம் வாழ்க்கையை - நாம் !
உயிரோடு இருப்பது அல்ல வாழ்க்கை,
உயிராக நினைப்பவரோடு வாழ்வதே வாழ்க்கை !
இழந்தது நம்மை, இதுவே நன்மை !
நமக்கு அல்ல, நம்மை நம்பிய
நமது பெற்றோருக்கு !
நாம் பெறப்போவது
கண்ணீர் தான் என்றாலும்,
அதனால் பெறுவது
சிலரின் புன்னகையும் தான்,,,,
நாம் - தான் !!!!!!!
(இப்படி காதலிப்போம் நாம் என்ற தலைப்பிற்காக
கவிதை எழுத ஆரம்பித்து,
என் வாழ்க்கையை எழுதி தோற்கிறேன்,,
அதனால் கவிதையின் தலைப்பை மாற்றுகிறேன் ! )