மாமியார் மருமகள்

ஒரு ஊரில் நிறைய குடும்பங்கள் இருந்தன.
ஆனால் மாமியார் மருமகள் சண்டை மிக மிக அதிகமா இருந்தது.
கணவர்களால் தினம் தினம் இந்தத் தொல்லையைத் தாங்க முடியலை.
அதில் ஒரு புத்திசாலிக் கணவன் மாமியார் மருமகள்களை அழைத்துச் சொன்னான்..
"எங்க ஆஃபிஸில இப்படி அடிக்கடி ஒருத்தரோட ஒருத்தருக்கு மனக்கசப்பு வந்து கிட்டே இருக்கும்.
நாங்கஎல்லாம் ஒன்னா ஒரு நாள் பிக்னிக் போவோம். ஒண்ணாக் கொண்டாடுவோம். கூத்தடிப்போம். எங்க மத்தியில் இருக்கிற போட்டிப் பொறாமையெல்லாம் தீர்ந்து போயிடும்.
எல்லோரும் ஒத்துமையா ஆயிடுவோம். நீங்களும் இதைச் செய்யலாமே!ன்னுஐடியா கொடுத்தான்."
அதன்படியே ஒரு நாள் பிக்னிக் முடிவாச்சி.. மாமியார்களெல்லாம் ஒரு பஸ்ஸிலயும், மருமகள்களேல்லாம் ஒரு பஸ்ஸிலயும் புறப்பட்டு பிக்னிக் போனாங்க..
போற வழியில ஒரு பெரிய பள்ளத்தில பிரேக் பிடிக்காம மாமியார்கள் போன பஸ் விழிந்திருச்சி.. யாருமே பிழைக்க வாய்ப்பே இல்லை.
எல்லா மருமகள்களும் ஓன்னு ஓலமிட்டு அழுதாங்க..
உடனே செல்ஃபோன் எடுத்து தங்கள் சொந்தக்காரங்களுக்கு எல்லாம் தகவல் சொல்லி அழுது கொஞ்ச நேரத்தில் நிதானமானாங்க..
ஆனால் ஒரே ஒரு மருமகள் மாத்திரம் அழுகையை நிறுத்தவே இல்ல.
எல்லோரும் அவளை சமாதானம் செய்து.. ஆனது ஆயிடுச்சி இனிமே என்ன செய்வது.. அழாத.. எனச் சமாதானம் செய்தாங்க..அவ அழுதுகிட்டே சொன்னா,...

எப்படி அழாம இருக்க முடியும்? எம் மாமியார் இந்த பஸ்ஸை மிஸ் பண்ணிட்டாங்களே... !!

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (9-Jan-15, 11:49 pm)
Tanglish : maamiyaar marumagal
பார்வை : 642

மேலே