காரியம் ஈடேற கையூட்டு -கவலைகள் குவியட்டும் நீ ஊட்டு

விரலது யெய்பர் விரைந் துபணி முடிப்பர்
கடனதை ஒழிக்க கடனென முடிப்பார் கிடந்து
பலனென கருதி பின்பலன் அனுபவிப்பார் !

இருப்போர் இல்லாதோர் பாராது
இரக்கமென்பதை தொலை துரத்தி
எடுப்பா பணமென கிடந்து துடிப்பார்!

கொடுத்த காசுக்கு கூலியாய்
அடுத்த ஓய்வுக்கு முன்வரை உழைப்பார்
கையூட்டு வட்டியுடன் வாங்கி ருசிப்பார்!

பிள்ளை பள்ளியில் கையூட்டு கேட்டால்
எத்திக்கென அறியாது எகிறி குதிப்பார்
சொத்துக்களை தான் மட்டும் வாங்கி குவிப்பார்!

வயதிருக்கையில் செவிகள் அடைத்து
சிரமேற்க்கொண்டு சேர்த்திடுவார் பாவமதை
தள்ளாது போகையில் ஒய்வூதியம் வாங்கிட
கையூட்டு கேட்டால் கிடந்து பொங்கிடுவார் !

உடல் மெலிந்து நோய் குவிந்து மருத்துவமனை நுழைவார்
பக்கவாத பணமுடை வந்தால் பதறி தவிப்பார்
அறுவை சிகிச்சைக்கு பலலட்சமென்றால்...

அலறி துடிப்பார் !
இறையே உனக்கிரக்க மில்லையோ வென்பார் !
இரக்கம் தவிர்த்து எல்லாம் இராண்டாய் வைத்த மனிதர் !

எழுதியவர் : கனகரத்தினம் (10-Jan-15, 1:30 am)
பார்வை : 291

மேலே