சும்மா iru

மகிழ்ச்சி என்பது கார், பங்களா, காசு, பணத்தில் இல்லை. நன்றாக உண்டு நன்றாக தூங்க முடிகிறதா என்பதுதான் மிக முக்கியம். உண்மையிலேயே உங்களைப் பற்றி அக்கறைப்படுகிற, அன்பு காட்டுகிற மக்கள் இருக்கிறார்களா என்பதுதான் முக்கியம்.- பொறாமை அகற்றல். வெற்றி வேண்டுமெனில் "சும்மா இரு "

உழைக்கத் தெரிந்தவர்கள் மற்றவரை ஒருபோதும் புறந்தள்ளமாட்டார்கள். பொறாமைப்படமாட்டார்கள். பொறாமை அகற்றல். வெற்றி வேண்டுமெனில் "சும்மா இரு "

வன்முறைக்கு முன் ஒரு அமைதி வேண்டியிருக்கிறது . அந்த அமைதியிலிருந்து தான் ஒரு வன்முறை தோன்றுகிறது. -கிருஷ்ண அர்ஜுன்.

"சும்மா இரு " என்பது உடம்பையோ,புத்தியையோ சொன்ன விஷயமில்லை.சும்மா இருக்கச் சொன்னது மனசை.வெற்றியிலும் தோல்வியிலும் மனசை விலகி இருக்கச் சொன்ன வார்த்தையிது.

வலிமையானவர்களும் மெளனமாக இருப்பதற்கு பழக வேண்டும்.இல்லையெனில், வாழ்க்கை துயரம் சூழ்ந்ததாக ஆகிவிடும். -கதை கதையாம் காரணமாம்.

நண்பர்கள் புரிந்துகொள்ளப்பட முடியாதபோது நீங்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டபோது மிக மோசமான எதிரியாக மாறிவிடுகிறார்கள். -வெற்றி வேண்டுமெனில் "சும்மா இரு "

தினம் தினம் செய்யும் காரியங்களில் நேர்த்தி வேண்டுமெனில் தியானம் செய்தல் அவசியம். இப்போது சொன்னது மிகப்பெரிய வாக்கியம். அனுபவித்தாலொழிய இதன் கனம் புரியாது. -வெற்றி வேண்டுமெனில் "சும்மா இரு "

மூச்சை சீராக்கினால் மனம் அமைதியாகிறது. மூச்சை சீராக்குவதற்கு ஹடயோகம் உதவி செய்கிறது. அமைதியான மனதை உள்பக்கம் திருப்பினால் எதனால் மனம், புத்தி, உடம்பு இயங்குகிறது என்று உற்றுக் கவனித்தால் வேறு ஒரு விஷயம் புலப்படும். -வெற்றி வேண்டுமெனில் "சும்மா இரு "

வலிமையான ஞாபக சக்தி, தெளிவான சிந்தனை, அமைதியான போக்கு இவை தியானத்தால் ஏற்படும். தியானம் செய்ய செய்ய பொறாமை அறவே போய்விடும் . மனதில் இருந்து பொறாமை போனால் போதும். அதைவிட உற்சாகமான ஒரு வாழ்க்கை எதுவுமில்லை. இது மிகப்பெரிய வரப்ரசாதம். அமிர்த குடம். -வெற்றி வேண்டுமெனில் "சும்மா இரு "

ஒரு ஞானியின் அருகே அமர்ந்தால் பதட்டம் முற்றிலும் நீங்குவதை உணர முடியும்.மனம் உள்ளுக்குள் பார்க்கத் தொடங்கும். மெல்ல அடங்கத் தொடங்கும். -வெற்றி வேண்டுமெனில் "சும்மா இரு " சும்மா இரு சொல் அற என்றலுமே அம்மா ஒருபொருள் ஒன்றுமறிந்திலனே என அருணகிரி நாதர் கந்தர் அனுபூதியில் இதே அர்த்ததில்தான் கூறியுள்ளார்.

எழுதியவர் : KR (14-Jan-15, 8:26 am)
பார்வை : 188

மேலே