தைத் திருநாள்

தமிழர் திருநாள்



இயற்கையை ஊனப்படுத்தும்
கந்தகப் புகை எழுப்பாமல்
மாரடைப்பை மலிவாய்த் தரும்
வெடிச் சத்தம் இல்லாமல்
யாரும் மனம் சுளிக்கும்
சிறு இடையூறும் இல்லாமல்
வேளாண்மை செய்து
மானிடர்க்கு உணவளிக்கும்
உழவரைப் போற்றி
ஒளிதந்து உயிர்வாழ
வழிகாட்டும் ஞாயிறைப் போற்றி]
உலகிற்கே பொதுமறை தந்த
வள்ளுவனைப் போற்றி
கொண்டாடும் தமிழர் திருநாள்
பண்பாட்டுத் திருவிழா!

எழுதியவர் : இரா. சுவாமிவாதன் (14-Jan-15, 12:10 pm)
Tanglish : daith thirunaal
பார்வை : 1915

மேலே