அப்பத்தாவின் போகி -பொள்ளாச்சி அபி
“ஏதாவது சிலவற்றை,
இன்றைக்கு
கொளுத்திவிட வேண்டும்..”
அடித்துச் சொன்னாள்
அப்பத்தா..
புகையில்லா போகியென
உறுதியாய் இருந்ததில்
அப்பத்தாவின் பேச்சை
அகங்காரத்துடன்
அசட்டை செய்தேன்..,
“கொளுத்த உன்னிடம்
எதுவும் இல்லையெனில்
முதலில்
அகங்காரத்தையாவது கொளுத்து,
அப்புறம் யோசித்துப் பார்..!”
அப்பத்தா சொன்னதிலிருந்து
யோசிக்கத் துவங்கினேன்..
என்னுடலே தீயாய் தகிக்கிறது..!