காதலில் ஒன்றுமில்லை..

காதல் வெறும் கற்பூரம்
எரிய எரிய மனம் வீசும்
காணாமல் போகும் காற்றோடு..
காதல் வெறும் குட்டை
மழை வந்தால் நிறையும்
கோடை வந்தால் மைதானம்.
காதல் வெறும் கவிதை
படிக்க படிக்க சுகம்,
கிழித்து போட்டால் வார்த்தை.
காதல் வெறும் வானம்
அளக்க அளக்க முடியாது
கண்ணை மூடு தெரியாது.
காதல் வெறும் நிலவு
பார்க்க பார்க்க ஜொலிக்கும்
உள்ளுக்குள்ளே இருட்டி கிடக்கும்.
காதல் வெறும் காமம்
தொடங்கும் போது ருசிக்கும்
முடிந்த பின் கசக்கும்.
காதல் வெறும் காதல்
யாருக்கு யார் மேல் வரும்
எப்படியோ முற்று பெறும்..

எழுதியவர் : (17-Apr-11, 3:19 pm)
சேர்த்தது : Sumi
பார்வை : 503

மேலே