குடியரசு தின நல்வாழ்த்துகள்

பூக்களின் நாடு
போர்களால்
உதிரங்களின் நாடாக
உருமாறியது.

பூ நிலம்
பாழ்நிலமாய்ப்
பழுதடைந்தது.

தியாகத் தலைவர்களின்
தீ யாகத்தில் மலர்ந்து
சுதந்திரம்.

மேற்கு
கிழக்காக திசை மாறியது.

இந்திய வானில்
மீண்டும் கதிரவன்
முளைவிடத் தொடங்கியது.

கதிர் வளர
குடியரசாய்
மறுமலர்ச்சி அடைந்தது.

குடியரசு இந்தியாவின்
குடிமக்களாய் ஒற்றுமைக்
கொடியை ஒன்றாய்ப்
பற்றிப் பிடிப்போம்
வெற்றி பெறுவோம்.
ஜெய்ஹிந்த்.

எழுதியவர் : (25-Jan-15, 11:10 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
பார்வை : 484

மேலே