மனிதா எழுக

சேவல் கூரையிலிருந்து கூவி
தரை இறங்கி விட்டது
ஆதவன் உதயத்தில் எழுந்து
மதியத்திற்கு நகர்ந்துவிட்டது
இன்னும் உறக்கம் கலையவில்லை
மனிதா நீ !
சேவலும் ஆதவனும் செயலில்
நாளைத் துவங்கி நடக்கிறது
செயலை மறந்த உறக்கத்தில்
மனிதா நீ
நாளைத் தொலைத்துக்கொண்டிருக்கிறாய் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (27-Jan-15, 9:57 am)
பார்வை : 371

மேலே