என் முதல் கவிதை

அறிந்தது தமிழ் மட்டும் ,
அதுவோ காரணம்..

அக்கம் பக்கத்தினரின்,
ஆர்வமோ காரணம்...

எதுவோ காரணம்...

மோகத்தின் வெளிப்பாடா..!

தாகத்தின் கூப்பாடா..!

நான் இங்கு கவி பாட...

நாளும் வாட்டும்
அவள் எண்ணம்,

நற்றமிழில் சின்னமாய்
நானும் எழுத தொடங்கினேன்

என் முதல் கவிதையை..

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (27-Jan-15, 5:59 pm)
Tanglish : en muthal kavithai
பார்வை : 75

மேலே