என் முதல் கவிதை
அறிந்தது தமிழ் மட்டும் ,
அதுவோ காரணம்..
அக்கம் பக்கத்தினரின்,
ஆர்வமோ காரணம்...
எதுவோ காரணம்...
மோகத்தின் வெளிப்பாடா..!
தாகத்தின் கூப்பாடா..!
நான் இங்கு கவி பாட...
நாளும் வாட்டும்
அவள் எண்ணம்,
நற்றமிழில் சின்னமாய்
நானும் எழுத தொடங்கினேன்
என் முதல் கவிதையை..