உரசுமிரு ஏகாந்தங்கள்

அறியாதப் பண் கசியும்
முனகலில் இதழ் கொடு
விஞ்ஞான விடை புரியும்
அணுப்பிளவில் உயிர் எடு
விரலேந்தவே நினது விலா
மயிரிழைகளின் நடனவிழா
குன்றின் மேல் கண் தாவிட
சிற்றூரின் வளைவுகளோ
எக்களிப்பில் விழி சொக்கிட
இனி தப்பித்த லாகுமோ...
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (28-Jan-15, 10:44 am)
சேர்த்தது :
பார்வை : 95

மேலே