மூடாத விழியின் கனவு

விழித்திருக்கும் இமையில்
கூட கனவுகள்
வருமென புரிந்தது.........

அவள்
வந்து சென்ற இந்நாட்கள்
கனவுகளாய் வெறும்
நினைவுகளாய் ஆனபோதும். .....

ஆம்,
கண்களில் பதிந்த முகம்
மறையவில்லை இன்னும்........

என் முகத்தை வருடிய
அவள் கூந்தலின் வாசம்
நீங்கவில்லை இன்னும்........

முத்தம் கொடுத்த உதடுகளில்
ஈரம் வற்றவில்லை இன்னும். .....

அவள் கைகள் கலைத்த
என் முடியை கூட
வாரவில்லை நான் இன்னும். .....

கட்டியணைத்த தேகத்தில்
சுட்டெரித்துக்கொண்டிருக்கிறது
வெப்பம்.........
கதைப்பேசி கரைந்திருந்த
படகோடு நினைவில் உள்ளது
அந்த தெப்பம்..........

ஊசி துளைத்தேன் வலிக்கிறது
இது கனவா........?
இல்லை
ஊனமான என் இதயத்தில்
வரும் நினைவா.........?

இரவோடு வந்திருந்தால்
கலைந்திருக்குமே........
உன் நினைவுகள்
உயிரோடு வந்து என்னை
கரைக்கிறதே..........

காதல் கனவுதனில் வந்தபோது
இனிக்கிறது
இப்படி கனவாகி போகையில்
தான் வலிக்கிறது.........

என்னவளே
நான் என்ன செய்வேன். ......?
சொல்

எழுதியவர் : கவியரசன் (30-Jan-15, 7:09 pm)
பார்வை : 104

மேலே