இயற்கையோடு உண்மை

கொக்கரிக்கும் மேகங்கள்
கொட்டவரும் தூறல்கள்
எச்சரிக்கும் மின்னல்கள்
அதை இடைமறிக்கும் யன்னல்கள்

கொத்து கொத்தாய் வித்து விட்ட
நெல்மணிகள் நாணி நிக்க
அறுவடை நாளை என்று
ஆசைமனம் பூத்திருக்கும்
உழவன் மொத்த உயிர்வேர்த்துநிக்கும்

காலம் கடந்த மழை
கதிர் அறுக்கும் வேளைவந்து
கரு அறுத்து போவதை போல்

காலம் கடந்தபின்னே சொல்லிடும்
ஒரு உண்மை
கனவுகளில் கல்லெறியும்
அது உண்மை

எழுதியவர் : இணுவை லெனின் (31-Jan-15, 5:31 am)
Tanglish : iyarkaiyodu unmai
பார்வை : 113

மேலே