மன அலைகளின் விசையால்

உன் வருகையை எதிர்நோக்கி இருக்கும் கண்கள்
உன் நடை அழகினுக்கு நாட்டியமாடும் நெஞ்சு
உன் செய்கைகளில் தனைமறக்கும் சிந்தை
நேசிக்கின்றேன் உன்னை என்று நினைக்கவோ !!!

உன் பார்வை கணைகளுக்காய் காத்திருக்கும் கருத்து l
உன் வழிப்போக்கு என் விழி போக்கினை நிர்ணயிக்க
உன்னிடம் சரணடைய துடிக்கும் சலனம்
மயக்கங்களின் உச்சமென்றோ நினைக்க !!!

செடி கொடிகளின் அழகு பூக்களில் !
காரணம் சிறிது கருத்தில் கொண்டால்
உயிர்களின் அழகும் இளமை அன்றோ !
விடலை என தோன்றும் இளமை – உண்மையில்
முழுமையின் முதல் தானோ !!!

முதலை பழிப்பது முறையோ ??
எழில் ஈர்ப்பும் , புதிர் மயக்கமும்
இயற்கையின் இன்ப லீலைகலன்றோ !

விதி விலக்காய் வாட்டம் கொள்ள நாட்டமும் இல்லை
விளையாட்டாய் உன்னை கொஞ்ச விருப்பமும் முன்னிற்க
வேடிக்கையாய் உன்னை காண்கிறேன் இன்றும் இமைக்காமல்
வருவாயோ என் மன அலைகளின் விசையால் – என்னிடம் என்றே !!

எழுதியவர் : ஷிவிரா !!! (31-Jan-15, 5:43 pm)
சேர்த்தது : mahakrish
பார்வை : 55

மேலே