காதல் பயில வந்தோம் காமம் கற்றுக்கொண்டோம்

சொட்டும் நீரில்
சுடர் விட்டெரியும் தீயே!
உன் பட்டு முகம்
பன்னீர்தானே சுரக்கும்..
இன்று கண்ணீர்
சுமப்பதேனோ?
கவலை விடு..

நம் கற்ப்பை
இழந்தோம் தவிர
உன் கரு(ப்) பை
நிறைக்கவில்லை!
என் காமக்கழிவை
கல்லிலேதானடி பாய்ச்சினேன்!
அதோ,
அங்கே சவ்வூடுபரவல்!
சத்தியமாய் நம்பு!

நித்தம் நித்தம்
உன்னால் நிராகரிக்கப்பட்ட
மனு இன்று
லஞ்சமில்லாமல் நிறைவேறியது. ஏனோ?
நீ பூட்டி வைத்த காமக்காற்று
ஓட்டையிட்டு வந்ததடி
வெளியே!
இன்றுதான் அது
புனிதமடைந்தது...

முத்தமிட்ட உன்
மிட்டாய் உதட்டில்
இரத்தம் சுரக்குதடி!
சற்று துடைக்கவிடு...
தடுக்காதே....
சுகமான போரிலே
சுத்தியல் பட்டது
தவறுதான்...
என்னை மன்னித்துவிடு..

ஆளில்லா காட்டுக்குள்ளே
அழுகை வேண்டாம்
போரில் வென்றது
நீதானே!
பிறகு கண்ணீர் விடுவதேனோ?

ஆதவன் வருமுன்பு
அவரவர் வீடு போவோம்
ஆடையிட்டுக்கொண்டு
அழாமல் வா பெண்ணே!

காதல் பயில வந்தோம்
காமம் கற்றுக்கொண்டோம்!
இதுவும் நன்மைக்கே
நாளை நடக்கும்
பாலியல் தேர்வுக்கு
படிக்கத் தேவையில்லை!
வா வா......

எழுதியவர் : தீனா (1-Feb-15, 7:31 pm)
சேர்த்தது : தீனா
பார்வை : 171

மேலே