நெஞ்சு பொறுக்குதில்லையே -மண் பயனுற வேண்டும்

சமுதாயசாளரங்கள் திறந்தேகிடக்கிறது
அதில் வெளிப்படும் தலைமுறையோ
விழி மறந்தே பிறக்கிறது

காவியுடை போட்டால் மனிதம்
கடவுள் என்றாகுமோ
போதிமரம் தாவும் வானரம் எல்லாம்
புத்தன் என்றாகுமோ

அரசஇயந்திரம் வயதாகிபோனதோ
கைத்தடி போல கையூட்டுஆனதோ
சாதி சான்றிதழ் கொண்டே இங்கு
அரசியல் மாறுதோ

தேன் சுரக்கும் நாட்டிலே
மீதேன் சுறண்டும்கூட்டமே -இது
நன்செய்நிலங்களில்நஞ்சை
விதைக்குமோ நாளை தலைமுறை
பஞ்சம் புசிக்குமோ

கருமாறி பிறந்த விதை -தினம்
தெருவோரம் வீழுதே -தன்
தேசத்தின் நிலை கண்ட
நெஞ்சு பொறுக்காத
பேனாவின்கண்ணீர் கவியாகுதே

எழுதியவர் : இணுவை லெனின் (5-Feb-15, 4:30 am)
பார்வை : 195

மேலே