ஆதலினால் காதல் செய்வீர் மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி

கண்ணிமைகும் நொடியில்
கடைக்கு சென்ற நேரத்தில் வெண்ணிலா ஒன்று வீதி ஊர்வலம் வருவதை நான் கண்டேன் !


இரவில் ஜொலிப்பதை கண்ட அழகை விட
எதிரினில் நடக்கும் அழகில் நான் விழுந்தேன் அவள் மனதில் !

மான் போல பெண்ணவள் மண் மீது கால் பதிக்க
என் மனம் மழை துளி போல் மண்ணில் கரைந்து !
அவள் பாதத்தின் பின்னே என் பாதம் தொடர்தேன்

அவள் பார்வையில் யெனை மறந்தேன் காதலில் முழ்கி பறந்தேன் பெண் உன்னாலே
ஆதலால் காதல் செய்தேன் உன்னை .

எழுதியவர் : ரவி . சு (5-Feb-15, 9:43 am)
பார்வை : 117

மேலே