காதலர் தினம்

"காதலிக்கிறேன்" என்று சொன்னால் குற்றமா பெண்ணே...!
ஆயிரம் குற்றம் செய்துவிட்டேன்...!
இது,எந்தன் இறுதி குற்றமாக இருக்கட்டுமே...!
ஆயிரம் பெண் இருந்த போதும் உன்னிடம் மட்டும் பகிர்ந்து விட்டேன்...!
எந்தன் காதலை....
ஏன்னென்று தெரியவில்லை பெண்ணே...!
விழிகளில் இருக்கும் இமை போல...!
வானத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் போல...!
என் இதயத்தில் இருக்கும்" நீ "...!
அடைத்து விட்டேன் பெண்ணே...
உன்னை என் இதயத்தில்...!
நீ,நினைத்தால் கூட அடைத்துவிட்ட உன்னை விடுதலை செய்ய இயலாது...!
ஏனென்றால் அடைத்து என் இதயத்தில்...!
உனக்காக என் இதயம் துடிக்கிறது...!
ஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயரை உச்சரிக்கிறது...!
உன் அன்பின் ஆழத்தில் மிதந்த நாள் முதலாய்....
சுவாசிக்க கற்றுக்கொண்டேன்..!
வானத்தில் பறந்து செல்ல கற்றுக்கொண்டேன்..!
உன்னை உரிமையுடன் "போடி வாடி"என்று அழைக்க கற்றுக்கொண்டேன்..!
பெண்ணே...!
இதயத்தை பறிமாறிவிடு...!
இல்லையெனில்,என் இதயத்தை எடுத்து சென்று விடு...!
அப்படியாவது,உன் கரங்களால் என்னை மாய்த்து கொண்டதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்...!

எழுதியவர் : அஜிக்கேயன் (14-Feb-15, 6:52 am)
Tanglish : kathalar thinam
பார்வை : 93

மேலே