காதலர் தினம் கவிதை
*
கனியைக் கடித்தச்
சுவையிலிருந்து தான்
தொடங்கியது
ஆதிக் காதல்.
இச் சுவையின் இனிப்பு
மனிதனுக்கு மன்மதப்
போதையூட்டிவிட்டதால்
யுகயுகமாய் பருகி
ருசித்து வருகின்றான்.
உணர்ச்சிகளில் இரவு
உற்சாகக் கொண்டாட்டம்
உடல் வலி மெய் மறந்து
காமத்தை வென்று
உள்ளத் தெளிவு பெறுகின்றான்.
பிரபஞ்சத்தின் உள்நுழைந்து
உள்ளொளிக் காண்கின்றான்.
காதல் இயற்கையின்
உள்மன வெள்ளோட்டம்
உலகமெங்கும் ஊற்றெடுத்து
உற்சாக வெள்ளமாய் பாயும்
சிறுதுளிப் பெருவெள்ளம்
காதல் கொடுத்த பரிசுகளே
இந்த உலக மக்கள்
யாதும் ஊரே யாவரும் கேளீர்
யாவரும் காதலர் யாவரும் வாழ்வர்
தீது என்றும் பிறர் தர வாரா…!!
*