புன்னகை ஓர் கவிதை
கண்ணிரண்டில் காதலின் பக்கம் விரிந்திட
கன்னக் குழிவினில் ஓர்கவிதை பூத்திட
நீசிரிக்கும் போதந்தக் காதோரக் கூந்தல்
கலைந்துவந் தின்னிதழோ ரம்தன்னில் நன்றிசொல்லும்
புன்னகை ஓர்கவி தை
கவிக் குறிப்பு : நான்கு அளவடியும் ஈற்றடி சிந்தடியும் கொண்ட
பலவிகற்ப ப ஃ றொடை வெண்பா .
ஐந்து அடி முதல் பன்னிரண்டு அடிகள் வரை அமைந்த வெண்பா
ப ஃ றொடை வெண்பா என்று கூறும் வெண்பா இலக்கணம்
படிக்கவும் ரசிக்கவும் முயலவும்
-----கவின் சாரலன்