உன்னைப் பிரிந்த நொடி முதல்

உன்னைப் பிரிந்த நொடி முதல் அடுக்கி வருகிறது வார்த்தைகள் என் தாய் தமிழிலே.

அதைக் கொண்டு செதுக்கி வருகிறது ஓர் கவிதையை என் கை விரல்கள்.

இதோ செதுக்கப்படும் கவிதை உனக்கென.

நீ 'வந்து வந்து' போகிறாய் என் விழி மூடிய கண்களுக்குள்.

நான் 'நொந்து நொந்து' போகிறேன் என் சதை மூடிய நெஞ்சுக்குள்.

நீ 'ஓட ஓட' விரட்டுகிறாய் என்னை.
நான் 'தேடித் தேடி' வருகிறேன் உன்னை.

நீ 'தொட்டுத் தொட்டு' போனாய் ஓர் பட்டுப் பூச்சியாய் அன்று.

நான் 'செத்து செத்து'
போகிறேன் ஓர் விட்டில் பூச்சியாய் இன்று.

எழுதியவர் : அரிபா (18-Feb-15, 12:37 pm)
பார்வை : 632

மேலே