உதிர்ந்த இதழ்கள்
ஏதேதோ எழுத நினைக்கும் விரல்கள்
எழுத விடாமல் தடுக்கும் சிந்தனைகள்
முட்டிமோதும் கருத்து மாற்றங்கள்
முறிக்கிப் கட்ட முடியா மணற்கயிறுகள்
உணர்வுக்கு மதிப்பளிக்கா உள்ளங்கள்
அடிமையாக்க நினைக்கும் அபகரிப்புகள்
ஆர்ப்பரிக்கும் எண்ண ஓட்டங்கள்
அனைத்தினூடும் தடுமாடும் துடிப்புகள்
உறவுகள் அறுந்தாலும் ஒட்டத்துடிக்கும் இதயங்கள்
அனைத்திற்கும் பதில்சொல்ல காத்திருக்கும் காலங்கள்
இங்கிதங்கள் மறந்த வாய்மொழிகள்
இறங்கிப் போகவேண்டுமா என்ற எகத்தாளங்கள்
ஊமையாகிப் போன மௌனங்கள்
பதில் சொல்ல முடியா கேள்விகள்
உதிந்து போன இதழ்களாய்...............
..................சஹானா தாஸ்